சர்ச்சையை தொடர்ந்து சம்பித் பத்ரா தனது எக்ஸ் பதிவில், “பூரியில் பிரதமர் மோடியுடன் பேரணியில் பங்கேற்றேன். அதன்பின்னர் ஏராளமான ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். அனைத்து இடத்திலும் ஸ்ரீஜெகன்நாதரின் தீவிர பக்தர் மோடி என்று கூறினேன். தவறுதலாக ஒரு இடத்தில் மாற்றி கூறிவிட்டேன்.எனது தவறுக்காக நான் ஜெகன்நாதரின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இந்த தவறுக்கான பிராயசித்தமாக அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பேன், “என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிரதமர் மோடி, “நான் மனித பிறவியே இல்லை. நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல், ஒரு சாதாரண மனிதரிடம் இருந்து பெறப்பட்டது கிடையாது. கடவுளால் மட்டுமே இந்த ஆற்றலை கொடுக்க முடியும்.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்,”எனத் தெரிவித்துள்ளார்.
The post நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பே இல்லை.. கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார் : பிரதமர் மோடி பகீர் பேட்டி appeared first on Dinakaran.