இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரித்து வருகிறது. அதை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்கும் என்றும், வெயில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளது: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் appeared first on Dinakaran.