உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

 

உளுந்தூர்பேட்டை, ஏப். 15: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 337 வாக்குப்பதிவு மையங்களுக்கும் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெற உள்ள தேர்தலின் போது பயன்படுத்த வேண்டிய பேப்பர் சீல், ஷ்பெசல் டேக், படிவங்கள், ஓட்டு போட வைக்கப்படும் மறைப்பு அட்டைகள், அறிவிப்பு அட்டைகள், ஓட்டு போட வைக்கப்படும் மை, பேனா, பென்சில், ஒட்டும் பசை, முத்திரையிட அரக்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பிரித்து, அவற்றை உரிய பெட்டிகளில் வைத்து,

பெட்டிகளை சிப்பங்களாக கட்டி, பின்னர் அதனை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் பிரித்து தயார் செய்து வைக்கும் பணி, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் பார்வையிட்டு அனைத்து பொருட்களும் சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் பரந்தாமன், தலைமை நில அளவர் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் இப்பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

The post உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: