வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளை

திருக்கோவிலூர்,மே 17: திருக்கோவிலூர் அடுத்த சித்தப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அஜித்தா(53), இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் உள்ள அய்யனார் என்பவரின் வீட்டுக்கு சென்று பேசிவிட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு வந்து தனது வீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனை அடுத்து அஜித்தா மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திருமால் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: