செல்லும் இடமெல்லாம் ராகுலுக்கு மிகப்பெரிய எழுச்சி திருட்டு அரசியல் செய்யும் பாஜ அண்ணாமலை தமிழன துரோகி: பொளந்து கட்டிய செல்வப்பெருந்தகை

திருச்சி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரசாரத்துக்கு செல்கிராறோ. அங்கெல்லாம் மிகப்பெரிய எழுச்சியை காண முடிகிறது. திருட்டு அரசியல், இன, மத அரசியல், சாதிய அரசியல், மொழி அரசியல் என பல்வேறு அரசியல்களை இந்தியாவில் பாஜ செய்து பார்க்கிறது. அவற்றுக்கெல்லாம் இந்த தேர்தலில் இந்திய மக்கள் தீர்ப்பு கூறுவார்கள். பொய்யும், பித்தலாட்டமும், வெறுப்பு அரசியலும் செய்து ஆட்சியை பிடிக்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள் பாஜவினர். ஆனால் பாஜவுக்கு இந்திய மக்கள் மீண்டும் இந்தியாவை பின்னடைவுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். துரோகத்தின் முகமாக உள்ள தமிழின துரோகி அண்ணாமலை. ஆர்எஸ்எஸ், பாஜவின் ஆகச்சிறந்த அடிமை அண்ணாமலை. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்பி ஷோபா, தமிழர்கள்தான் ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்தார்கள் என்கிறார். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டாமா?. இவ்வாறு அவர் கூறினார்.

The post செல்லும் இடமெல்லாம் ராகுலுக்கு மிகப்பெரிய எழுச்சி திருட்டு அரசியல் செய்யும் பாஜ அண்ணாமலை தமிழன துரோகி: பொளந்து கட்டிய செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: