விசாரணையில், வாகனத்தில் வந்தவர்கள் மும்பையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் தங்க நகைகளை பல்வேறு மாவட்டங்களிலுள்ள நகை கடைகளுக்கு எடுத்து செல்லும் ஒப்பந்தத்தை பெற்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த விவரங்களுக்கும், வாகனத்தில் இருந்த தங்க நகைகளின் மதிப்பீட்டிற்கும் வேறுபாடு இருந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தங்கநகைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.4.50 கோடி தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.