நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளரிடம் அண்மையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது காரில் சோதனை. ஆலங்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்ய சென்றபோது இடைகால் விலக்கு என்ற இடத்தில் நயினார் நாகேந்திரனின் காரில் சோதனை செய்யப்பட்டது.

 

The post நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Related Stories: