எனவே அதனை அடிப்படையாகக் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 4ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவிஜா வழங்கிய தீர்ப்பில், ‘‘டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஏனெனில் அவரது தரப்பில் தற்போது தான் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற சூழலில் ஜாமீன் வழங்குவது என்பது சாத்தியம் கிடையாது என தெரிவித்த நீதிபதி, கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post மதுபான கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.