இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து: ராகுல் காலம் துவங்கிடுச்சு…தமிமுன் அன்சாரி பஞ்ச்

நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூசை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேசியதாவது:காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசியல் சாசன சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்தார்கள். ஆனால் மோடி ஆட்சி காலத்தில் இந்தியாவின் அரசியல் சாசன சட்டங்களை சீர்குலைக்கும் வேலைகள், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைகளே நடக்கின்றன.

இதனால் சர்வதேச அளவில் தலைகுணிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி. பாசிச மயத்தை, வரலாற்றை குழிதோண்டி புதைக்க நினைக்கும் பாஜவின் திட்டத்திற்கும், இதை எதிர்க்கும் இந்தியா கூட்டணிக்குமான போட்டிஇது.சொந்த நாட்டு மக்கள் மணிப்பூரில் ரத்தக் கண்ணீர் வடித்த போது அங்கு செல்லவில்ைல. தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தபோது இங்கு வரவில்லை. எங்களையெல்லாம் தனித்தனியாகத்தான் பார்க்கிறீர்கள். ஆனால் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளது.

தெற்கையும் வடக்கையும், கிழக்கையும் மேற்கையும் ஒரே இந்தியாவாக ஒற்றுமைப்படுத்தியுள்ளது. இதனால் நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள். இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து ராகுல் காலம் துவங்கியுள்ளது. ஹிட்லர், முசோலினி கூட சிந்திக்க முடியாத வகையில் செயல்பட்டு வருகிறார் மோடி. எங்களுக்கு வேறு ஒரு கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் வாயப்பிருந்தும் அதை விட ஜனநாயகத்தை காப்பதே கடமை என்று இந்தியா கூட்டணியை ஆதிரிக்கிறோம். இந்த கூட்டணி நிச்சயம் நாட்டை மாற்றிக் காட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியா முழுவதும் ராகு காலம் முடிந்து: ராகுல் காலம் துவங்கிடுச்சு…தமிமுன் அன்சாரி பஞ்ச் appeared first on Dinakaran.

Related Stories: