மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கோவை, ஏப். 7: கோவை ராம் நகர் மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (86). இவர் அத்திப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தார். அப்போது மன உளைச்சல் காரணமாக வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மூதாட்டி தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: