மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று வெளியிட்டார். இதில் 74 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில், ஜிஎஸ்டி வரி நீக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சிஏஏ சட்டம் வாபஸ் பெறப்படும். ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும். கச்சத்தீவு மீட்க குரல் கொடுக்கப்படும்.

காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும். நதிநீர் படுகை மேலாண்மை சட்டம் கொண்டுவரப்படும். அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்படும். சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என 74 தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் வைகோ பேசும்போது, திருச்சியில் நலிவடைந்து வரும் பெல் மற்றும் அதை சார்ந்துள்ள சிறுகுறு தொழில்கள் செழிப்படைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

The post மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: