3 பேரையும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பொங்கலூர் தேவனாம்பாளையம் அருகே வாய்க்கால்மேட்டில் இரு சிறுமிகள் சடலம் மிதப்பதாக, நேற்று மதியம் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
இறந்தவர்கள் வீணா மற்றும் பிரீத்தா என தெரிய வந்தது. அதேபகுதியில் சிறிது நேரத்தில் சந்தோஷின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றினர். 3 பேரும் வாய்க்காலில் குளிக்க சென்ற நிலையில், நீச்சல் தெரியாமல் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரின் உடல்களும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post திருப்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.