இதுவரை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் பணம் கொடுத்தார்கள் ? எவ்வளவு கொடுத்தார்கள் என்பதுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பி.எம்.கேர்ஸ் நிதிக்கும், அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிற அதேநேரத்தில் ஒன்றிய அரசினால் நடத்தப்படுகிற 38 பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.2105 கோடி வழங்கியிருக்கிறது. இதைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்தவிதமான சட்ட ஒப்புதலுமின்றி ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் நிதி திரட்டி, தன்னிச்சையாக செலவு செய்வதை விட மிகப்பெரிய ஊழல் என்ன இருக்க முடியும்? பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி.
The post இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூலித்தது அம்பலம்: செல்வப்பெருந்தகை விளாசல் appeared first on Dinakaran.