பாமக கால்களை பிடித்து பாஜ கூட்டணி வைத்துள்ளது: பாலகிருஷ்ணன் தாக்கு

சேலத்தில், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாஜவிற்கும், மோடிக்கும் எதிராக சுனாமி அலை போல எதிர்ப்பு அலை வீசுகிறது. பாஜவுடன் பாமக வைத்துள்ளது ஒவ்வாமை கூட்டணி. பாஜவுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில், பாமகவை கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர். அது சந்தர்ப்பவாத கூட்டணி. இதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

அதிமுக தேர்தல் களத்தில் பூஜ்ஜியமாக உள்ளது. தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜ வெற்றி பெறும் என மோடி கூறுவது வேடிக்கையானது. கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜ துடைத்தெறியப்படும். வடமாநிலங்களில் பாஜ வேட்பாளர்களே வாபஸ் பெறும் நிலைதான் உள்ளது. ரவுடிகள் கூடாரமாக பாஜ உள்ளது. அண்ணாமலை அநாகரீகமாக பேசுகிறார். மதவெறி அரசியலை தான், அண்ணாமலை இறையாண்மை என்று கூறுகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாமக கால்களை பிடித்து பாஜ கூட்டணி வைத்துள்ளது: பாலகிருஷ்ணன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: