அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து

 

அறந்தாங்கி, ஏப் 6: அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். அறந்தாங்கியை சேர்ந்தவர் அப்பாஸ். இவருக்கு சொந்தமாக நாயக்கர்பட்டியில்தேங்காய் நார் கம்பெனியில் உள்ளது. இந்த தேங்காய் நார் கம்பெனியில் நேற்று திடீரென தீபிடித்து எரிந்தது. இதையடுத்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தேங்காய் நார் கம்பெனியில் தேங்காய் நாரில் தீ பிடித்து எரிந்ததை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: