குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை

விருதுநகர், ஏப்.6: விருதுநகர் பாலம்மாள் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ்(46). இவரது மனைவி லூர்து மேரி(36). திருமணம் முடிந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் அமல்ராஜ், தினசரி குடித்து விட்டு மனைவியிடம் இருவரும் செத்து போய்விடுவோம் என்று சொல்லி புலம்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் மனைவி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த அமல்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பஜார் போலீசில் மனைவி லூர்து மேரி புகாரில் விசாரித்து வருகின்றனர்.

The post குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: