வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஈரோடு, ஏப். 6: ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கடத்தூர், கூடக்கரை, குமரன் நகரைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பண்ணாரி (37). கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற பண்ணாரி, இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நேற்று முன் தினம் காலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடக்கரை கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றபோது பண்ணாரி நீரில் மூழ்கி சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: