பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

கோபி,மே11: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கோபியில் செயல்பட்டு வரும் சி.கே.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 128 பேருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி ஆர்.கோபிகா 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.அவர் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும் மற்ற அனைத்து படங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அதே போன்று மாணவி அனுராக ரெனிஷா 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அவர் தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.மாணவி சப்னம் சுல்தானா 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்து உள்ளார். அவர் தமிழ் 97, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்.கோபிகாவை பள்ளி நிர்வாக அறங்காவலர் சுசீலா அருணாச்சலம், முதல்வர் கவிதா, பள்ளி மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினா்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: