வாட்ச்மேன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, மே 14: ஈரோடு, சூரம்பட்டிவலசு, சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவரது மனைவி ஜோதிகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் மணிகண்டன் ஈரோடு பெரியார் நகரில் உள்ள நகை கடையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் கடந்த 8ம் தேதி இரவு வழக்கம் போல குடிபோதையில் வந்து மனைவி ஜோதிகாவை அடித்துள்ளார்.

இதனால், கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தர்மபுரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். தனியாக இருந்து வந்த மணிகண்டனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மனைவி ஜோதிகாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்தபோது மணிகண்டன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், உடல் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாட்ச்மேன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: