பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. ஆனாலும் கடந்த காலங்களில் வெற்றியை கொடுத்த அதிமுக, திண்டுக்கல் தொகுதியில் நேரடியாக போட்டியிட முடியவில்லையே ஏன்? அதிமுக தலைவர்கள் தங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி பேசி வாக்கு சேகரிக்க இயலவில்லை. அதனால்தான் கூட்டணி கட்சியின் பின்னே ஒழிந்து கொண்டு அதிமுகவினர் வருகிறார்கள். அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கவில்லை. பாஜ ஆட்சியில் பெண்களும், தலித் பழங்குடி மக்களும், சிறுபான்மையினரும் மிக மோசமான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள். பாஜ, அதிமுக போன்ற ஏமாற்று பேர்வழிகள் நமக்கு வேண்டாம், நமக்கு, நமது வாழ்க்கை சூழலை எளிமையாக்கி பொருளாதார பிரச்னைகளை சரிசெய்யும் வாக்குறுதிகளை கொடுத்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சி தான் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post காஸ் விலை குறைப்பு நாடகம்: இவரே குண்டு வைப்பாராம்… இவரே வந்து எடுப்பாராம்…: மோடியை கலாய்த்த ரோகிணி appeared first on Dinakaran.