மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பேருந்து, வேன்கள் இயக்கப் படுகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வேடல், இலுப்பப்பட்டு போன்ற இடங்களில் மாணவ, மாணவிகள் 12 பேரை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளிக்கு புறப்பட்டது. ராஜகுளம் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவிகள், 4 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் 8ம் வகுப்பு படிக்கும் தருண்குமார் என்ற மாணவன் படுகாயமடைந்தான். மீதமுள்ள மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்து மாணவர்களின் பெற்றோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
The post காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவ, மாணவிகள் காயம் appeared first on Dinakaran.