சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மறுத்துள்ளார்.மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன் என பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் எச்சரிக்கை விடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
The post வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன்…தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர்!! appeared first on Dinakaran.