நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: 8ம்தேதி உள்ளூர் விடுமுறை

 

புதுக்கோட்டை,ஏப்.5: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுவதால் அன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 8ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளதால் அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து இதன்மூலம் ஆணையிடப்படுகிறது.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 13ம்தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாள். வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும்.

மேலும், அத்தியாவசியப் பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு மேற்படி விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான 8ம்தேதி (திங்கட்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் செயல்படும் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: 8ம்தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: