அதிமுக வெற்றிபெற்றால் மோடியை தமிழ்நாட்டில் தவமிருக்க வைப்போம்: நடிகை விந்தியா கலாய்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘39 தொகுதிகளிலும் ஓட்டு என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும். ஓட்டு என்ற ஆயுதத்தை அதிமுகவுக்கு கொடுத்துப் பாருங்கள், அது மக்களை காப்பாற்றும்.

அந்த ஆயுதத்தை பாஜவுக்கு கொடுத்தால் அது உங்களையே அடிக்க பயன்படும். இந்த தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்தால் இப்போ 4 முறை இங்கே வரும் பிரதமரை தமிழ்நாட்டிலேயே தவமிருக்க வைப்போம். ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்க வைப்போம். இந்த தேர்தல்ல பாஜ சாமியையும், மதத்தையும் சொல்லி அரசியல் செய்து சாமியையே பயப்பட வைப்பார்கள் என்றார்.

The post அதிமுக வெற்றிபெற்றால் மோடியை தமிழ்நாட்டில் தவமிருக்க வைப்போம்: நடிகை விந்தியா கலாய் appeared first on Dinakaran.

Related Stories: