தூக்குபோட்டு வாலிபர் சாவு

விருத்தாசலம், ஏப். 4: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் குருபிரகாஷ்(29). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் தேடி வரும் நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்தவர், சம்பவத்தன்று தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தபோது அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவரின் மோட்டார் கொட்டகையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது தந்தை வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூக்குபோட்டு வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: