நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்ததை மறந்து, பாஜவிற்கு மட்டுமின்றி அவரை முதல்வராக்கிய எங்களுக்கும் துரோகம் செய்த பழனிசாமி, இன்று வரை தனது குள்ளநரித்தனத்தை காட்டி வருகிறார்.இவ்வாறு பேசினார். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாங்கள் டிடிவி வீட்டுக்கு நாயாகவும், இப்போது சிங்கமாகவும் உள்ளோம் என்றார். அதற்கு டிடிவி, நாய் சிங்கமாகாது. ஓநாயாகத்தான் மாறும் என்றார். பதிலுக்கு ஆர்.பி.உதயகுமார், என்னை தோற்கடிக்க டிடிவி நாயாக வேலை பார்த்தார் என்றார். தற்போது, எடப்பாடியை குள்ளநரித்தனம் என கூறியுள்ளார். அடுத்து என்ன விலங்கு பெயர் பாக்கி இருக்கிறதோ…
The post குள்ளநரித்தனம் எடப்பாடி பழனிசாமி: விலங்குகள் பெயரை அதிமுகவினருக்கு சூட்டும் டிடிவி appeared first on Dinakaran.