தினமும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை விஸ்தாரா நிறுவனம் இயக்கி வரும் நிலையில் 15 மூத்த விமானிகள் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த நிறுவனத்தில் சுமார் 800 விமானிகள் உள்ளனர். இதையடுத்து விஸ்தாரா நிறுவனத்தில் ரத்து செய்யப்படும் மற்றும் தாமதமாகும் விமானங்களின் தினசரி தகவல் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானம் ரத்து மற்றும் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
The post நாடு முழுவதும் 50 விமான சேவை ஒரேநாளில் ரத்து: விஸ்தாரா நிறுவனத்தால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.