அந்தியூர் அருகே ஆந்திர விவசாயியிடம் ஒரு லட்சம் பறிமுதல்

அந்தியூர்,மார்ச்31: அந்தியூர் அருகே உள்ள பட்டூர் நால்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிர்மல் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(44) என்ற விவசாயி சரக்கு வாகனத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து புண்ணாக்கு வாங்குவதற்காக ரூ 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 பணம் எடுத்து வந்துள்ளார்.உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

The post அந்தியூர் அருகே ஆந்திர விவசாயியிடம் ஒரு லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: