அதிமுகவால்தான் பாஜ தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. கடந்த 10 வருட பாஜ ஆட்சிக் காலத்தில் அனுபவித்த ஒரே நபர் நரேந்திர மோடியின் நண்பர் அதானி குடும்பம் மட்டும்தான். பிரதமர் மோடி திமுகவினர் தோல்வி பயத்தின் காரணமாக தூங்கவில்லை என கூறி வருகிறார். ஆமாம், திமுகவினர் பாசிச பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வத்தை வெற்றி பெறச் செய்தீர்கள். தற்போது எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டார். அதற்கு, 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று மக்கள் ஆரவாரத்துடன் பதில் அளித்தனர். மேலும் பெண் ஒருவர் மோச்சேரி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென கேட்டார்.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் கண்டிப்பாக, நீங்கள் கேட்ட பகுதிக்கு மேம்பாலம் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் விழுப்புரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது உறுதி. ஏப்ரல் 19ம் தேதி நீங்கள்போடும் ஓட்டுதான் மோடிக்கு வைக்கும் வேட்டு. அவரை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும். கடந்த மக்களவை தேர்தலில் எதிர் அணியினர் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். தற்போது பல அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் கடந்த தேர்தலில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். இந்த தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை பெற்றிபெற வைத்து எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’ என்றார்.
The post பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.