நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம்: சுப்பிரமணியம் சுவாமி

டெல்லி: நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். பணம் இல்லை எனக்கூறும் நிர்மலா சீதாராமன் 2004-05, 2022-23 வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை அவர் கூறியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

The post நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம்: சுப்பிரமணியம் சுவாமி appeared first on Dinakaran.

Related Stories: