கோஹ்லி – கிரீன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தனர். கிரீன் 33 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து கோஹ்லி – மேக்ஸ்வெல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 28 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சுனில் நரைன் சுழலில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி அரை சதம் அடித்து அசத்தினார்.
ரஜத் பத்திதார், அனுஜ் ராவத் தலா 3 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் – கோஹ்லி ஜோடி அதிரடியில் இறங்க, ஆர்சிபி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கார்த்திக் 20 ரன் (8 பந்து, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. கோஹ்லி 83 ரன்னுடன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல் தலா 2, சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.
The post ஆர்சிபி 182 ரன் குவிப்பு: 83 ரன் விளாசினார் கோஹ்லி appeared first on Dinakaran.