நான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன் என்பதால், அவர் என்னை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று கூறி கொச்சைப்படுத்தினார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்தும், ஜீவனாம்சமும் வேண்டும்’ என்று கோரினார். இவ்வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் முடிந்து, அங்கிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் பிறப்பித்த உத்தரவில், ‘பாதிக்கப்பட்ட பெண் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதனால் அவருக்கு அதிகளவில் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்ப வன்முறை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. பிரிந்து வாழும் மனைவிக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடும், மாதம் 1.5 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகையும் கணவர் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
The post மனைவியை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று அழைத்த வழக்கு; ரூ.3 கோடி இழப்பீடு, மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை: விவாகரத்து வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.