இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு

ஜார்கிராம்: மக்களவை தேர்தலில் தோல்வியை பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோபத்தின் உச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; மாநிலத்தில் தொழில்கள் முதல் உள்கட்டமைப்பு வரை அனைத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் அளித்து வருவதாகவும், இதன் மூலம் மாநிலத்தை பின்னோக்கி தள்ளுவதாகவும், குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநில எல்லை பகுதிகளில் நிலத்தை ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் தெரிவித்தார். மீண்டும் மத அரசியலை கையில் எடுத்த மோடி இந்து மத நம்பிக்கையை மம்தா பானர்ஜி அரசு புண்படுத்தி வருவதாக கூறினார். பின்னர் பீகார் மாநிலம் பாட்னா சென்ற மோடி; அண்மையில் உயிரிழந்த பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

The post இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: