அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத வாக்களிப்பு: வாகனம் மூலம் விழிப்புணர்வு

 

அரியலூர், மார்ச் 29: அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் நகராட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு பிரசார துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு வாகனங்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத வாக்களிப்பு: வாகனம் மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: