குமரியில் கனிமொழி எம்.பி. ஏப்.1ல் பிரசாரம் அமைச்சர் மனோதங்கராஜ் அறிக்கை

நாகர்கோவில், மார்ச் 29: குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக துணை பொதுசெயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி வரும் ஏப்ரல் 1ம் தேதி திங்கள்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அன்று மாலை 4.30 மணிக்கு குழித்துறை அண்ணாசிலை, 5.30க்கு புதுக்கடை பேருந்து நிலையம், மாலை 6.15 குளச்சல் பீச், இரவு 7 மணிக்கு நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை, இரவு 7.45 மணிக்கு கொட்டாரம் சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குமரியில் கனிமொழி எம்.பி. ஏப்.1ல் பிரசாரம் அமைச்சர் மனோதங்கராஜ் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: