முக்கூடல் ராமசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

பாப்பாக்குடி, மார்ச் 29: முக்கூடல் சேனை தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசீதாதேவி சமேத ராமசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு மங்கள் இசையுடன் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மஹாகணபதி ஹோமம், கோபூஜை, சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அதன் பின் சுவாமி-அம்பாளுக்கு புனிதநீர் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை ஸ்ரீசீதாதேவி திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலமும், ராமர்-சீதாதேவி திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இரவு சிறுமிகளின் கோலாட்டத்துடன் அலங்கரிக்கபட்ட சப்பரம் ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை முக்கூடல் சேனை தலைவர் சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post முக்கூடல் ராமசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: