சுவர் விளம்பரம் செய்த 3 பேர் மீது வழக்குபதிவு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 29: பாப்பிரெட்டிப்பட்டியில், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார், தேர்தல் பணிக்காக ரோந்து சென்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி மீறி மோளையானூர் அம்பேத்கர் காலனி பகுதியில் பிரசாத் (37), வெங்கட்சமுத்திரம் பகுதியில் ஜெயராமன் (67), கொப்பக்கரை பகுதியில் மாரிமுத்து (60) ஆகிய 3 பேரும் சுவர் விளம்பரம் வரைந்திருந்தனர். இதையடுத்து போலீசார் 3பேர் மீதும் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுவர் விளம்பரம் செய்த 3 பேர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: