பாபநாசம் கல்லூரியில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

கும்பகோணம், மார்ச்28:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரைய்யா வாண்டையார் கலை கல்லூரியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024ல் 100% வாக்களிப்பது தொடர்பாக மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாக்காளர் உறுதிமொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மணிகண்டன், அம்மாபேட்டை சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கல்லூரி முதல்வர் பாஸ்கர் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாபநாசம் கல்லூரியில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: