பணம் திருடியவர் கைது

சாத்தூர், மார்ச் 28: பெண்ணிடம் பணத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(31). இவர் சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த போது அவர் வைத்திருந்த கூடை பையில் இருந்த மணிபர்ஸ் மாயமாகியிருந்தது. அதில் பணம் ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து மணிபர்ஸ் திருடிய விருதுநகரை சேர்ந்த மணிமாலா(45) என்பவரை கைது செய்தனர்.

The post பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: