கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

உத்தமபாளையம், மார்ச் 28: ராயப்பன்பட்டி அருகே கஞ்சாவுடன் சுற்றிதிரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பன்பட்டி எஸ்.ஐ.கண்ணன் தலைமையில் போலீசார் ஆனைமலையன்பட்டி- குளத்துக்கரை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஹரிஷ் குமார்(22) என்பதும், ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ராயப்பன்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: