டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி

திருப்புத்தூர், மார்ச் 28: புதுக்கோட்டை மாவட்டம், கோனாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராசு (48). இவர் கடந்த மார்ச் 9ம் தேதி கோனாபட்டியில் இருந்து திருப்புத்தூர் அருகே விராமதி கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டூவீலரில் வந்துள்ளார். இரணியூர் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த கார், அவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: