100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மதுரை, மார்ச் 28: கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற நூறு சதவீத வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரையில் நேற்று நடந்தது. மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் கூடுதல் கலெக்டர் டாக்டர் மோனிகா ராணா ஆகியோர் தலைமையில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மதுரை, எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் வணிக வளாகத்தில் பொதுமக்களை கவரும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘பிளாஷ் மோப்’ என்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவியர்களின் நடனம், மைம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக வாக்காளர்களிடம் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக அவர்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆர்டிஓ ஷாலினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: