சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு

சாத்தான்குளம், மார்ச் 28: சாத்தான்குளம் அருகே சாலை வளைவில் காணப்பட்ட அபாய பள்ளம், தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் இருந்து நங்கைமொழி, மெஞ்ஞானபுரம் செல்லும் சாலையில் வேப்பங்காடு செல்லும் வளைவில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பெரும்பள்ளம் காணப்பட்டது.

இந்த சாலை திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் சென்று திரும்பும்போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தினகரனில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சாலை வளைவில் காணப்பட்ட பள்ளத்தை அதிரடியாக சீரமைத்தனர். சீரமைத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: