ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை

ஆலங்குளம், மார்ச் 28: ஆலங்குளம் அருகே வடக்கு கரும்பனூர் மேலதெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (45). இவர் நெல்லையில் எலக்ட்ரிசீயனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்(43). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் 3வருடங்களுக்கு முன்னர் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக மாதந்தோறும் தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார். இந்நிலையில் வறுமை காரணமாக சில மாதங்களாக தவணை தொகையை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் தமிழ் வீட்டிற்கு வந்து பாக்கி தவணைத் தொகையை கட்டுமாறு கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த தமிழ் சோகத்தில் இருந்துள்ளார். நேற்று இசக்கிமுத்து வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது தமிழ் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த தமிழின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: