அனுமதியின்றி பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 மீது வழக்கு பதிவு

வேலூர், மார்ச் 28: வேலூரில் அனுமதியின்றி பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மகேஷ் ஆனந்த் நேற்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரை நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் அனுமதியின்றி பேரணியாக சென்றதாக பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேஷ்ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் விக்னேஷ், மணிராஜ் உட்பட 75 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 103 பேர் மீது தேர்தல் விதியை மீறியதாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அனுமதியின்றி பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: