இதில் படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். உள்ளே 600 கிலோ பீடி இலைகள் இருந்தது. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.10 லட்சம். படகுடன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் இருந்து படகு மூலம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கை நீர்கொழும்பு பகுதிக்கு கடத்தப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
The post இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல் appeared first on Dinakaran.