நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம்,மார்ச்27: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த திடகாத்திரமான உடல் நிலையில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்க நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் கொடுத்து விண்ணப்பிக்கலாம். அல்லது அலுவலக வேலைநாட்களில் 04365 299765 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: