10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்

 

சிவகங்கை, மார்ச் 27: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 103 தேர்வு மையங்களில், 278 பள்ளிகளைச் சேர்ந்த 8,824 மாணவர்கள், 9,161 மாணவிகள், தனித்தேர்வர்கள் 187 பேர் உட்பட மொத்தம் 18,172 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,619 மாணவர்கள், 9,081 மாணவிகள், தனித்தேர்வர்கள் 120 பேர் உள்பட 17,867 பேர் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வை எழுதினர்.

216 மாணவர்கள், 85 மாணவிகள் என மொத்தம் 301 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வு கண்காணிப்பில் இணை இயக்குநர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: