சோழவந்தானில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

சோழவந்தான், மார்ச் 27: சோழவந்தானில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தமிழ் எழிலன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி தேர்தல் அலுவலரும், வாடிப்பட்டி தாசில்தாருமான மூர்த்தி, சிறப்புரையாற்றி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து முக்கிய வீதிகள் வழிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய படி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுமாறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் வருவாய் மற்றும் காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சோழவந்தானில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: