திருமங்கலம் அருகே அரசு பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருமங்கலம், மார்ச் 27: அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி நடைபெற்றது. திருமங்கலம் அருகேயுள்ள அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் படைப்பாற்றல், கற்பனைதிறன், புத்துணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக புகையில்லா சமையல் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் கல்பனாசுகுமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியை செந்தில்குமாரி வரவேற்றார். இனிப்பு அரிசி, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை பழவகை ஜூஸ்கள், முளைகட்டிய தானியங்கள், கேரட்லட்டு, சான்விச் காரப்பொரி, சாக்லேட்பால், வெஜிடபிள் சாலட், பழக்கலவை எள், பொரிகடலை மற்றும் நிலக்கடலை உருண்டைகள், அவல் உப்புமா, மாங்காய் காரம் பதநீர் மொஜிட்டோ போன்றவற்றை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் உதவியுடன் தயாரித்து காட்சிப்படுத்தினர். இதற்குரிய விளக்கத்தினையும் அவர்கள் தந்தனர். ஆசிரியர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், பெற்றோர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். உதவி தலைமையாசிரியர் அழகேஸ்வரன் நன்றி கூறினார்.

The post திருமங்கலம் அருகே அரசு பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: